Skip to main content

Posts

அரசு அலுவலகங்களில் நடைமுறையில் இருக்கும் வரைவுகளும் அதன் வகைகளும் பற்றி தெரிந்து கொள்வோம்

 முக்கியத்துவம்:-  கடிதப் போக்குவரத்து என்பது அலுவலக நடைமுறையில் ஒரு முக்கியமான அங்கமாகும். இது இரண்டு வழி நடவடிக்கை ஆகும். ஒன்று அலுவலகத்திற்கு வெளியிலிருந்து வரப் பெறும் கடிதங்கள். மற்றொன்று அலுவலகத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் கடிதங்கள். இவ்விரண்டு நடவடிக்கைகளுக்கும் அலுவலகத் தலைவர், பிரிவுத் தலைவர்கள் மற்றும் எழுத்தர்கள் கூட்டுப் பொறுப்பு வகிக்கின்றனர்.  கடிதப் போக்குவரத்தை நிர்வாகத்தின் ஆணிவேர் என்று சொல்லலாம். ஏனெனில், நிர்வாகம் கடிதப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெறுகிறது. அலுவலகத்திற்கு உயர் அலுவலகங்கள், அரசு, சார்நிலை அலுவலகங்கள், இதர துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து வெவ்வேறு வடிவில் பெறப்படும் கடிதங்களை அலுவலகத் தலைவர் பார்வையிட்டு, பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு, பிரிவு எழுத்தர்களுக்கு பகிர்மானப் பதிவேட்டின் படி வழங்கப்பட்டு, அவர்களது தன்பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இத்துடன் Incoming Tapals என்ற நடவடிக்கையின் மூலம் கடிதப் போக்குவரத்தில் 50% பணி நிறைவு பெறுகிறது. மீதி 50% பணியும் முழுமையாக நிறைவடைய வேண்டும...

தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் பின்பற்றப்படும் அலுவலக நடைமுறை நூல்

முன்னுரை:- அலுவலக நடைமுறை நூல் முதலில் வருவாய்த்துறை அலுவலகங்களில் அலுவலக நடைமுறையும் , கடித போக்குவரத்து பிரிவில் பணியை துரிதப்படுத்துவதற்காக ஏற்படுத்த ப்பட்டது அலுவலகங்களில் ஒருவர் புதியதாய் பணியில் சேர்ந்த உடன் அலுவலக நடைமுறை நூலினை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பிரிவு தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இளநிலை உதவியாளர் மற்றும், உதவியாளர் அனைவருக்கும் இந்த நூலின் உள்ள விதிமுறைகளை தெரிந்து உள்ளதா என்பதைப் உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்.  அரசு பணியாளர் மற்றும் அலுவலர்கள் இந்த நூலின் உள்ள விதிமுறைகளின் படி தான் அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும். அலுவலக நடைமுறைக்கு எதிராக நடவடிக்கைக்கு வழி வகுக்க  கூடாது. வருகை நேரம்:-  அரசு பணியாளர்கள் அனைவருமே வேலை நாட்களில் ஒழுங்காகவும் , காலை 10 மணிக்கும் அரசு அலுவலகத்தில் வந்து சேர வேண்டும். அலுவலக நேரம் காலை 10 மணியில் இருந்து  மாலை 5.45 மணிவரை இயங்கி வருகிறது. அரசு பணியாளர்கள் உணவு அருந்துவதற்காக மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு அலுவலகத்தில் அரசு பணியாளர்கள் ஒரே நேரத்தி...

தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 ஒரு பார்வை

அரசு ஊழியர்களுக்கான பல்வேறு விடுப்பு  விதிகள்  அடிப்படை விதி 58 முதல் அ.வி. 104 வரை சொல்லப்பட்டு 01.01.1922 முதல் நடைமுறையில் இருந்தன.  அவ்விதிகள் அரசு ஊழியர்களுக்கு போதுமான பயன் தரதக்க வகையில் அமையவில்லை. அதனால் தனியாக விடுப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு 4.9.1933 -ல் தமிழ் நாடு விடுப்பு விதிகள் நடைமுறைக்கு வந்தன. அரசு ஊழியர்களுக்கு தகுதியான விடுப்புகள்:- 1.ஈட்டிய விடுப்பு த.ந.வி. வி.எண் 8 தமிழ்நாடு அரசு 01.07.1994 முதல் ஈட்டிய விடுப்பினை கணக்கிடும் முறையினை மாற்றியமைத்தது. அடிப்படை பணியில்  முறையாக ஐந்து வருடம் பணி முடிகாத பணியாளர்களுக்கு ஒரு வருடத்தில் 15 நாட்கள் மட்டுமே  வரவு வைக்க முடியும் . அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிக இருப்பு 30 நாட்களுக்கு மிகை ஆக கூடாது. அடிப்படை பணியாளர் முறையாக ஐந்து வருடம் பணி முடிகாத பணியாளர்களுக்கு முன் வரவு வைக்க தகுதி இல்லை. மற்றும் இரண்டு முழு நாட்காட்டி பணி காலத்திற்கு 2  1/2  நாட்கள் வரவு வைக்கப்படும். உயர் பணியில் தகுதிகாண் பருவம் முடித்தவர்கள் மற்றும் அடிப்படை பணியில் ஐந்து வருடம் முறையாக பணி முடித்த அரசு ஊழியர்களுக்கு...

Probation declaration related government orders and letters

அரசு ஊழியர் அரசுப் பணியில் இணைந்த நாள் முதல் அவரது திறன், கடமை, அரசுப் பணியில் ஒழுக்கம், நடத்தை விதிகள், ஆகியவைகளில் ஒரு அரசு ஊழியர் எவ்வாறு நடந்துக் கொள்கிறார், நியமனம் அலுவலரின் மன நிறைவு அளிக்கும் வகையில் விளம்புகை செய்ய  தொடங்கப்படும் காலம் தகுதிகாண் பருவ காலம் எனப்படும். இவை ஒவ்வொரு பணித் தொகுதிக்கு ஏற்றவாறு மூன்றாண்டுகளில் ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..  இவை, தொடர்பாக சுற்றறிக்கைகள், அரசு ஆணைகள், அரசு கடிதங்கள், ஆகியவை இத்துடன் இணைத்து உள்ளேன்...  தகுதிகாண் பருவ காலம் தொடர்பான அரசு ஆணைகள்/ கடிதம்/ சுற்றறிக்கை கீழ் காணும் லிங்க் கிளிக் செய்யுங்கள்.👇👇👇👇 Click to download

பணி பதிவேடு பராமரிப்பு நடைமுறை மற்றும் பதிவு படிவத்தின் வரைவு மாதிரி

பணி பதிவேடு பராமரிப்பு என்பது ஒரு  அரசு பணியாளர்கள்  அல்லது அரசு  அலுவலர்களுக்கு மிக மிக முக்கியமான பதிவேடு ஆகும்  , அவ்வகை பதிவேடுகளை உரிய நேரத்தில் உரிய முறையில் பதிவுகளை  ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். பணி பதிவேடு பராமரிப்பு நடைமுறை மற்றும் பணி பதிவேடு வரைவு மாதிரி படிவங்கள் ஆகியவை இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது. Download  PDF Format  Click Here

கருணை அடிப்படையில் பணி நியமனம் முறை

கருணை அடிப்படை ஒரு பார்வை:        ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது  இறந்து விட்டால் அவரது குடும்பம் பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிக்கப்படும். இந்நிலையில் அரசு அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு கருணையின் அடிப்படையில் அவரது வாரிசுகளுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அரசு பணி நியமனம் வழங்கும். ஒரு அரசுப்பணியாளர் அவரின் குடும்பம் நலனை கருத்தில் கொண்டு வழங்கப்படும் பணியை அவரது குடும்பத்தினர் உரிமை கொள்ளல் இயலாது.  ஒரு அரசுப்பணியாளர் இறந்து மூன்று ஆண்டுக்குள் அவரது வாரிசுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அவரது வாரிசுகளுக்கு 18 வயது நிறைவு  செய்த்திருக்க வேண்டும். 53 வயது பூர்த்தி ஆகும் முன்னரே மருத்துவ ரீதியாக இயலா நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வாரிசுகளும்  அரசாணை நிலை எண் 18 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நாள்: 23.01.2020 - இன் படி கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி உண்டு.  ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும் போது இறக்க நேரிடும் போது அவரது திருமணம் ஆன பெண் வாரிசுக்ளுக்கும் கரு...